follow the truth

follow the truth

July, 26, 2025
Homeஉள்நாடுசஜித்திற்கு பிரதமர் பதவியை வழங்குமாறு கோரிக்கை விடுத்த ஜலானி பிரேமதாச - டயானா கமகே

சஜித்திற்கு பிரதமர் பதவியை வழங்குமாறு கோரிக்கை விடுத்த ஜலானி பிரேமதாச – டயானா கமகே

Published on

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது தனது கணவருக்கு பிரதமர் பதவியை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் மனைவி ஜலானி பிரேமதாச, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே தெரிவித்தார்.

இன்று நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

‘எதிர்க்கட்சித் தலைவர் மட்டுமல்ல, அவரது மனைவியும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை தொலைபேசியில் அழைத்து சஜித்தை பிரதமராக்க வாய்ப்பளிக்குமாறு கோரிக்கை விடுத்ததை
முன்னாள் ஜனாதிபதி எங்களுடன் பகிர்ந்து கொண்டார்’ என நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே தெரிவித்தார்.

தொடர்ந்தும் போராட்டங்களை நடத்தினால் சஜித்தை மக்கள் வீதியில் இறங்கி அடிப்பார்கள் என டயானா கமகே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சமீபத்திய நாட்களில் 21 காட்டு யானைகள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உள்ளன

கடந்த இரண்டு மாதங்களில் 21 காட்டு யானைகள் காயமடைந்து சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் துணை அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி...

பாதுகாப்பு அமைச்சின் புதிய ஊடக பேச்சாளர் நியமனம்

பாதுகாப்பு அமைச்சின் புதிய ஊடக பணிப்பாளர் மற்றும் பேச்சாளராக பிரிகேடியர் பிரேங்க்ளின் ஜோசப், நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் இந்தப் பதவியில் இருந்த...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை

மத்திய ,சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் எனவும்...