follow the truth

follow the truth

July, 18, 2025
Homeஉள்நாடுஇஷாலினி விவகாரம் : மொழி பெயர்ப்பாளரின்றி மரண விசாரணை சாட்சிப் பதிவு ஒத்திவைப்பு

இஷாலினி விவகாரம் : மொழி பெயர்ப்பாளரின்றி மரண விசாரணை சாட்சிப் பதிவு ஒத்திவைப்பு

Published on

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் கொழும்பு பெளத்தாலோக்க மாவத்தை வீட்டில், வீட்டு வேலைகளுக்கு அமர்த்தப்பட்டிருந்த ஜூட் குமார் இஷாலினியின் மரணம் தொடர்பிலான மரண விசாரணை சாட்சிப் பதிவுகள் அடுத்த வருடம் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பீ/ 52944/02/21 எனும் குறித்த வழக்கு செவ்வாய்க்கிழமை (டிச. 06) மரண விசாரணை சாட்சிப் பதிவுக்காக விசாரணைக்கு வந்தது.

கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய முன்னிலையில் இவ்வாறு அவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.

இதன்போது 4ஆம் இலக்க சாட்சியாளரின் சாட்சியத்தைப் பெற்றுக்கொள்ள, தமிழ் மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியை பெற்றுக்கொள்ள முடியாமல் போனது.

இவ்வாறு மொழி பெயர்ப்பாளரின் உதவியைப் பெற முடியாமல் போகும் 2 ஆவது சந்தர்ப்பம் இதுவாகும்.

அதன்படி குறித்த வழக்கின் மரண விசாரணை சாட்சிப் பதிவுகள் எதிர்வரும் 2023 ஜனவரி 10 ஆம் திகதிவரை ஒத்தி வைக்கப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வலுசக்தி அலுவல்கள் பற்றிய உப குழு நியமனம்

உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழுவின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா...

ராஜித சேனாரத்னவின் முன்பிணை மனு நிராகரிப்பு

இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தம்மை கைது செய்யப்படுவதற்கு முன்னர், முன்பிணை வழங்குமாறு கோரி முன்னாள் அமைச்சர்...

தஞ்சமடைந்த 06 யானைகள் உடவளவை யானைகள் சரணாலயத்தில் விடுவிப்பு

உடவளவை யானைகள் பராமரிப்பு நிலையத்தில் தஞ்சமடைந்த 06 யானைகள் உடவளவை சரணாலயத்தில் விடுவிக்கப்பட்டன. உடவளவ யானைகள் பராமரிப்பு நிலையத்தில் பராமரிக்கப்பட்டு...