follow the truth

follow the truth

July, 18, 2025
HomeTOP1வலுசக்தி அலுவல்கள் பற்றிய உப குழு நியமனம்

வலுசக்தி அலுவல்கள் பற்றிய உப குழு நியமனம்

Published on

உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழுவின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தலைமையில் வலுசக்தி அலுவல்களுக்கான உபகுழுவொன்றை நியமிக்க நேற்று (17) தீர்மானிக்கப்பட்டது.

உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தலைமையில் நேற்றையதினம்(17) பாராளுமன்ற வளாகத்தில் கூடியபோதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்ட பின்னர் இந்த உபகுழு நியமிக்கப்பட்டது.

வலுசக்தித் துறை தொடர்பில் அனுபவம் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேராவின் தலைமைத்துவத்தின் கீழான இந்த உபகுழுவின் ஊடாக இந்நாட்டின் மின்சாரம் மற்றும் வலுசக்தித்துறைகளில் எரிசக்தி துறையில் எதிர்காலத்தில் நேர்மறையான நடவடிக்கைகளை
எடுப்பதற்குத் தேவையான பிரச்சினைகள் குறித்து விவாதித்து தேவையான பரிந்துரைகளை வழங்க எதிர்பார்த்திருப்பதாகத் துறைசார் மேற்பார்வைக் குழுவின் தவைர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாகன கடன்களுக்கான விதிமுறைகளில் மாற்றம்

மோட்டார் வாகனங்களுக்கான நிதி வசதிகளை வழங்கும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளைப் புதுப்பித்து, இலங்கை மத்திய வங்கி நேற்று(17)...

ராஜித சேனாரத்னவின் முன்பிணை மனு நிராகரிப்பு

இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தம்மை கைது செய்யப்படுவதற்கு முன்னர், முன்பிணை வழங்குமாறு கோரி முன்னாள் அமைச்சர்...

தஞ்சமடைந்த 06 யானைகள் உடவளவை யானைகள் சரணாலயத்தில் விடுவிப்பு

உடவளவை யானைகள் பராமரிப்பு நிலையத்தில் தஞ்சமடைந்த 06 யானைகள் உடவளவை சரணாலயத்தில் விடுவிக்கப்பட்டன. உடவளவ யானைகள் பராமரிப்பு நிலையத்தில் பராமரிக்கப்பட்டு...