follow the truth

follow the truth

June, 16, 2025
HomeTOP2சர்வதேச நாணய நிதியம் மௌனிக்கிறது

சர்வதேச நாணய நிதியம் மௌனிக்கிறது

Published on

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகக் குழு, இலங்கையின் 2.9 பில்லியன் டாலர் பிணை எடுப்புக்கு ஆண்டு இறுதிக்குள் முறையாக ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படவில்லை, என நன்கு அறிந்த இரண்டு வட்டாரங்கள் தெரிவித்தன.

ரொய்ட்டர்ஸின் கூற்றுப்படி, இலங்கையின் மூன்று முக்கிய இருதரப்பு கடன் வழங்குநர்களான சீனா, ஜப்பான் மற்றும் இந்தியாவை உள்ளடக்கிய கூட்டுப் பேச்சுக்களின் முக்கியத்துவத்தை சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியது.

பல வளர்ந்து வரும் பொருளாதாரங்களுக்கான முன்னேற்றம் மற்றும் புதிய தவணைகள் பற்றி விவாதிக்க டிசம்பர் 22 வரை கூட்டங்களைச் சேர்த்த சர்வதேச நாணய நிதியத்தின் ஆன்லைன் வாரிய நாட்காட்டி, இலங்கையைப் பற்றி குறிப்பிடவில்லை.

இது தொடர்பில் பதிலளித்த இலங்கையின் நிதி அமைச்சகம், சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்புதலைப் பெறுவதில் “100% கவனம் செலுத்துகிறது” என்று கூறியது. “எங்கள் இருதரப்பு கடனாளர்களிடமிருந்து நிதி உத்தரவாதங்களை விரைவில் பெறுவதற்கு தேவையான ஒவ்வொரு கொள்கை நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்து வருகிறோம்” என்று அமைச்சகம் ஒரு மின்னஞ்சல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், பொருளாதாரத்தை மீட்டெடுக்க அண்டை நாடான இந்தியாவில் இருந்து மற்றொரு கடனைப் பெற வேண்டியிருக்கும் என்று உள் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, நிதி மற்றும் கூட்டுத்தாபன விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமனை புதுடில்லியில் சந்தித்ததற்கு இதுவே முக்கிய காரணம் என மிகவும் நம்பகமான வட்டாரம் ஒன்றில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான இந்தியாவின் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு தொடர்பாக உயர்ஸ்தானிகர் மொரகொட கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் அமைச்சர் சீதாராமனுடன் பல சுற்று கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.

அவர்களுக்கிடையிலான சமீபத்திய சந்திப்பில் பொருளாதார மற்றும் நிதி உறவுகளை மேலும் மேம்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தினூடான இலங்கையின் தற்போதைய கலந்துரையாடல்கள் மற்றும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் தற்போதைய நிலை குறித்து உயர்ஸ்தானிகர் மொரகொட அமைச்சர் சீதாராமனிடம் தெரிவித்தார்.

இலங்கை மக்களின் வறிய மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்கள் மீது பொருளாதாரச் சுருக்கத்தின் கடுமையான தாக்கம் பற்றியும் மொரகொட குறிப்பிட்டிருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 36 மணி நேரத்தில் 100 மி.மீற்றருக்கும் அதிக பலத்த மழை

நாட்டின் சில பகுதிகளில் எதிர்வரும் 36 மணி நேரத்தில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என...

இலங்கையை சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாகவும் பிரகாசிக்கச் செய்வோம்

சுற்றுலாப் பயணிகளின் சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், அனுபவங்களைத் தேடிச் செல்லும் உலகில், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாக...

சுகாதார அமைச்சருக்கும் ஐக்கிய தாதியர் சங்கத்திற்கும் இடையே கலந்துரையாடல்

சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, ஐக்கிய தாதியர் சங்கத்தின்...