follow the truth

follow the truth

June, 16, 2025
HomeTOP2"மின்கட்டணம் அதிகரித்தால், ஆடை உற்பத்தியினை தொடர முடியாது"

“மின்கட்டணம் அதிகரித்தால், ஆடை உற்பத்தியினை தொடர முடியாது”

Published on

மீண்டும் மின்சாரக் கட்டணங்கள் 60-70 வீதத்தால் அதிகரிக்கப்பட்டால், இலங்கையின் ஆடைத் தொழிலை உலகளவில் பராமரிக்க முடியாத நிலை ஏற்படும் என ஆடை உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

மீண்டும் ஒருமுறை மின்கட்டண உயர்வை ஆடைத்தொழிலால் தாங்க முடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இலங்கையில் வியாபாரம் செய்வதற்கு போட்டியான சூழல் இருக்க வேண்டும் எனவும், டொலரின் பெறுமதியை கடைசி மின்சாரத்துடன் எடுத்துக் கொண்டால் இலங்கையில் உற்பத்திச் செலவு அதிகமாகும் எனவும் ஒன்றிணைந்த ஆடைகள் சங்க மன்றத்தின் (JAAF) செயலாளர் நாயகம் யோகன் லாரன்ஸ் தெரிவித்தார்.

மீண்டுமொருமுறை மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டால், தற்போதைய சந்தை நிலவரத்தின் அடிப்படையில் ஆடைத் தொழிற்சாலைகளால் அதனைத் தாங்கிக் கொள்ள முடியாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 36 மணி நேரத்தில் 100 மி.மீற்றருக்கும் அதிக பலத்த மழை

நாட்டின் சில பகுதிகளில் எதிர்வரும் 36 மணி நேரத்தில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என...

இலங்கையை சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாகவும் பிரகாசிக்கச் செய்வோம்

சுற்றுலாப் பயணிகளின் சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், அனுபவங்களைத் தேடிச் செல்லும் உலகில், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாக...

சுகாதார அமைச்சருக்கும் ஐக்கிய தாதியர் சங்கத்திற்கும் இடையே கலந்துரையாடல்

சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, ஐக்கிய தாதியர் சங்கத்தின்...