follow the truth

follow the truth

August, 2, 2025
HomeTOP2"மின்கட்டணத்தினை செலுத்த வேண்டாம்" - ரஞ்சன்

“மின்கட்டணத்தினை செலுத்த வேண்டாம்” – ரஞ்சன்

Published on

அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ள மின் கட்டணத்தினால் மின்சாரக் கட்டணத்தைச் செலுத்த முடியாத மக்களின் வீடுகளில் மின் இணைப்பைத் துண்டிக்கும் பணிகளில் ஈடுபடுவதில்லை என சிலோன் பவர் தீர்மானித்துள்ளதாக தொழிற்சங்கங்களின் ஐக்கிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மின்கட்டணம் அதிகரிக்கப்படும் எனவும், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மின்சார தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தவுள்ளதாக அதன் அழைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் குறிப்பிடுகின்றார்.

கஷ்டத்தில் இருக்கும் மக்களுக்கு மின்கட்டணத்தை உயர்த்துவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை என்றும் அவர் கூறுகிறார்.

இவ்வாறு மக்களை மேலும் ஒடுக்கி மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்தால் அதனை முறியடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஒட்டுமொத்த மக்களுடன் இணைந்து முன்னெடுப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...