follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடு"தவறான அறிக்கைகளை வெளியிடாதீர்கள்" - பாட்டளி

“தவறான அறிக்கைகளை வெளியிடாதீர்கள்” – பாட்டளி

Published on

இலங்கை மின்சார சபை ஆகஸ்ட் மாதத்தில் கட்டணத்தை உயர்த்தாவிட்டால், ஒக்டோபர் மாதத்தில் இலங்கை மின்சார சபையின் நட்டம் 11 பில்லியன் ரூபாவாக இருக்கும் என முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கை மின்சார சபையின் செயற்பாட்டு இலாபத்திற்கு காரணம் நீர் மின் உற்பத்தி அதிகரிப்பே தவிர கட்டண அதிகரிப்பு அல்ல என அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கை மின்சார சபை முறையே 635.5 மற்றும் 655.0 கிகாவாட் மணிநேர நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளதாக பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

ஆகஸ்ட் மாதத்தில் நீர் மின் உற்பத்தி 633.9 ஜிகாவாட் மணிநேரமாக இருந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அந்த மாதத்தில் கட்டணம் முழுமையாக அதிகரிக்கப்பட்ட போதிலும் இலங்கை மின்சார சபையின் நட்டம் 9 பில்லியன் ரூபா என சபை உறுப்பினர் தெரிவிக்கிறார்..

“அமைச்சரே, இதுபோன்ற பொய்யான மற்றும் தவறான அறிக்கைகளை வெளியிடுவதற்கு முன் உங்கள் கணக்கைச் சரி செய்யுங்கள்.” என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்திருந்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...