follow the truth

follow the truth

July, 12, 2025
Homeஉள்நாடுஇளைஞர் பிரதிநிதித்துவ விவாதம் கோரி சபாநாயகருக்கு கடிதம்

இளைஞர் பிரதிநிதித்துவ விவாதம் கோரி சபாநாயகருக்கு கடிதம்

Published on

பாராளுமன்றம் மற்றும் மாகாண சபைகளில் இளைஞர் பிரதிநிதித்துவத்துக்கான இரண்டாவது விவாதத்திற்கான தனிப்பட்ட உறுப்பினர் பிரேரணையை எடுத்துச் செல்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்குஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற மற்றும் மாகாண சபை தேர்தல் சட்டங்களை திருத்துவதற்கான பரிந்துரைகளை அமைச்சு வழங்காததாலும், அவற்றுக்கான கால அவகாசம் அன்றைய தினம் முடிவடையவுள்ளதாலும், ஜனவரி 14 ஆம் திகதிக்கு பின்னரான ஒரு நாளில் உரிய விவாதத்தை நடத்துமாறு இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் கேட்டுக்கொள்கிறார்.

பாராளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களில் 25% இளைஞர் பிரதிநிதித்துவத்தை வழங்குவதற்கான தனியார் உறுப்பினர்களின் முன்மொழிவுகளில் இருந்து உள்ளூராட்சி பிரதிநிதித்துவத்திற்கான அமைச்சின் பரிந்துரை இன்று(05) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் குறிப்பிடுகின்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்றைய வானிலை: மழையா? வெயிலா? – உங்கள் பகுதியின் வானிலை முன்னறிவிப்பு

சப்ரகமுவ மாகாணம் மற்றும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இடைவிடாத மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்...

மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசியல் அதிகாரமும் அரச அதிகாரிகளும் கூட்டாக செயற்பட வேண்டும்

நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசியல் அதிகாரமும்...

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு ஜூலை 28 விசாரணைக்கு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல்...