தற்போது நிலவும் ஊழியர் பற்றாக்குறை காரணமாக இன்றும் 05 ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிலாபம் பாதை, பிரதான பாதை மற்றும் களனிவெளி பாதையில் இயங்கும் 05 ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களாக ஊழியர்கள் பற்றாக்குறையால் தினசரி ரயில் பயணத்தை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.