follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2போலி தலதா மாளிகையின் பத்திருப்பு பகுதி இடித்தழிப்பு

போலி தலதா மாளிகையின் பத்திருப்பு பகுதி இடித்தழிப்பு

Published on

குருநாகல் – பொத்துஹெரவில் நிர்மாணிக்கப்பட்ட போலி தலதா மாளிகையின் பத்திருப்பு (எண் கோண மண்டபம்) தற்போது இடித்து அழிக்கப்பட்டு வருவதாக டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு அங்குள்ள செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

முன்னதாக குருநாகல், பொத்துஹெர பிரதேசத்தில் போலி தலதா மாளிகை கட்டப்பட்டமை தொடர்பில் பௌத்த உயர்பீடம் மற்றும் தலதா மாளிகையின் தியவதன நிலமே ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கடிதம் ஒன்றினை கையளித்திருந்தனர்.

உலகளாவிய பௌத்தர்களை ஏமாற்றி, பெறுமதியான பொருட்களையும் பணத்தையும் பெற்றுக்கொண்டு ஜனக சேனாதிபதி என்ற ஒருவரால் போலியான ‘தலதா மாளிகை’ கட்டப்பட்டு வருவதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இவ்விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

48 மணி நேர வேலைநிறுத்தம்

வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் 48 மணி நேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட ரயில் சாரதிகள் தீர்மானித்துள்ளனர்.

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...