follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉலகம்உக்கிரமாகும் பிரேசில் ஜனாதிபதிக்கு எதிரான போராட்டங்கள்

உக்கிரமாகும் பிரேசில் ஜனாதிபதிக்கு எதிரான போராட்டங்கள்

Published on

பிரேசில் ஜனாதிபதி லுலா டா சில்வாவுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் தொடங்கியுள்ளன.

பிரேசிலின் ஜனாதிபதியாக மூன்றாவது முறையாக அவர் பதவியேற்பதற்கு முன்பும் ஒரு வாரத்திற்குப் பிறகும் அது நடந்தது.

கடந்த ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற பிரேசில் ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தேர்தல் முடிவுகளை நிராகரித்த முன்னாள் ஜனாதிபதி போல்சனாரோவின் ஆதரவாளர்கள் பிரேசில் தேசிய காங்கிரஸ் கட்டிடம் மற்றும் உச்ச நீதிமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்து அவர்களது சொத்துக்களை சேதப்படுத்தியுள்ளனர்.

பிரேசில் தேசியக் கொடியின் நிறங்களை அணிந்துகொண்டு அந்நாட்டு ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

போராட்டக்காரர்களை கலைக்க அந்நாட்டு பாதுகாப்புப் படையினரும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர். போராட்டக்காரர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பிரேசில் ஜனாதிபதி லுலா ட சில்வா தெரிவித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற பிரேசில் ஜனாதிபதித் தேர்தலில் 50.9 வீத வாக்குகளைப் பெற்று மூன்றாவது முறையாக அந்நாட்டின் அதிபராக லுலா ட சில்வா தெரிவு செய்யப்பட்டார்.

லூலா டா சில்வா 2003-2010 காலகட்டத்தில் பிரேசில் ஜனாதிபதியாக இருமுறை பதவி வகித்துள்ளார்.

ஊழல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டில் சிக்கிய லூலா ட சில்வாவுக்கு பிரேசில் நீதிமன்றம் பல ஆண்டுகளுக்கு முன்பு சிறை தண்டனை விதித்தது.

ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற பிரேசில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டிரம்பை கொல்ல ஈரான் திட்டம் – நெதன்யாகு அதிர்ச்சி தகவல்

அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது...

இஸ்ரேல் மீது ஏவுகணைகள், டிரோன்களை வீசி தாக்கிய ஈரான்

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில் பதில் தாக்குதலை நடத்தியுள்ளது ஈரான். இந்த சூழல் மத்திய கிழக்கில்...

ஈரான் விமானப்படை தளபதி இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழப்பு.

ஈரான் நாட்டின் ஐ,.ஆர்.ஜீ.சி இராணுவ வான்பரப்புக்கு பொறுப்பான விமானப் படை தளபதி அமீர் அலி ஹஜிஸத் இஸ்ரேல் தாக்குதலில்...