ATMஇல் பணம் திருடிய வெளிநாட்டவர்கள் உட்பட ஐவர் கைது

364

அரச வங்கிகளின் ஏ.டி.எம். இயந்திரங்களில் இருந்து பணத்தை திருடிய சம்பவம் தொடர்பில் வெளிநாட்டவர்கள் இருவர் உட்பட 5 பேர் கொழும்பு மற்றும் கட்டுநாயக்க பிரதேசங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வெளிநாட்டவர்கள் கனடா மற்றும் பல்கேரிய பிரஜைகள் என தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

காலி, ஹிக்கடுவ, பத்தேகம ஆகிய இடங்களில் அமைந்துள்ள வங்கிகளின் ஏ.டி.எம் இயந்திரங்களின் கணினி கட்டமைப்புக்குள் ஊடுருவி மென்பொருள் அமைப்பை மாற்றி, இவர்கள் சுமார் ஒரு கோடி ரூபாவை திருடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here