follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுசேபாலின் கதை குறித்து தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் வாக்குமூலம்

சேபாலின் கதை குறித்து தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் வாக்குமூலம்

Published on

கண்டி ஸ்ரீ தலதா மாளிகை தொடர்பில் சமூக ஊடகங்களில் அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள சேபால் அமரசிங்கவிடம் விசாரணை நடத்துவது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழு தொல்பொருள் பணிப்பாளர் நாயகத்திடம் இன்று (09) காலை வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொண்டது.

அண்மையில் சேபால் அமரசிங்க என்ற நபர் பௌத்தர்களின் மணிமகுடமான ஸ்ரீ தலதாவை இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிட்டிருந்தார்.

இதன்படி பொலிஸ் மா அதிபருக்கு பல தரப்பினரிடமிருந்து பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று விசாரணைகளின் பின்னர் கடந்த 5 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் சேபால் அமரசிங்க கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நாளை (10) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

அத்துடன், குருநாகல், பொத்துஹெற , அஹுகுடாவில் அமைந்துள்ள போலி தலதா மாளிகையின் ஸ்தாபகர் ஜனக சேனாதிபதியிடமும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.

விசாரணை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று வாக்குமூலம் பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

சுமார் 5 மணி நேரம் விசாரணை அதிகாரிகள் அங்கு அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...