follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஹம்பாந்தோட்டையிலும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்

ஹம்பாந்தோட்டையிலும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்

Published on

ஹம்பாந்தோட்டையில் ஏற்றுமதி அடிப்படையிலான எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெற்றோலிய உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

குறித்த ஏற்றுமதி வாய்ப்புக்களைப் பயன்படுத்துவதற்காக பல்வேறு தரப்பினர்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

அதற்கமைய, ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நிறுவுவதற்கு பொருத்தமான முதலீட்டாளர் ஒருவரைத் தெரிவு செய்வதற்காக விருப்பக் கோரல் அறிவித்தலை வெளியிடுவதற்கும், அவற்றில் அடிப்படைத் தகைமைகளைப் பூர்த்தி செய்கின்ற முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பை வழங்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...