follow the truth

follow the truth

May, 18, 2024
Homeஉள்நாடுஎக்ஸ்பிரஸ் பேர்ல் சேதம் தொடர்பான அறிக்கை கையளிப்பு

எக்ஸ்பிரஸ் பேர்ல் சேதம் தொடர்பான அறிக்கை கையளிப்பு

Published on

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்தினால் இலங்கையில் கடல் சூழலுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை இன்று (10) நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் இராஜாங்க அமைச்சர் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.

இந்த அறிக்கை எதிர்காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிபுணர் குழுவில் 40 பிரதிநிதிகள் உள்ள நிலையில், பேராசிரியர் அஜித் டி சில்வா, மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் முதுகலைப் பிரிவின் பீடாதிபதி மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் பிரசாந்தி குணவர்தன ஆகியோர் இணைத் தலைவர்களாக கடமையாற்றியுள்ளனர்.

இந்தக் குழு ஒன்றரை ஆண்டுகளாக கப்பல் விபத்து குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி இந்த அறிக்கையை தயாரித்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

வெள்ளவத்தையில் நினைவேந்தலில் ஈடுபட்டவர் கைது

வெள்ளவத்தை பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொண்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று காலை வெள்ளவத்தை கரையோரப் பகுதியில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன....

மது, போதைப்பொருள் போன்றவற்றை ஊக்குவிக்கும் ஒரு யுகம் உருவாகியுள்ளது

அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டாலும், மது, போதைப்பொருள் மற்றும் சிகரெட் போன்றவற்றை ஊக்குவிக்கும்...

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று  (18) மாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதுளை, இரத்தினபுரி,...