அரசாங்கத்தின் வரிக் கொள்கைகளின் பாதகங்களை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) பல தடவைகள் சுட்டிக்காட்டிய போதிலும், அரசாங்கம் அவற்றைப் புறக்கணித்தமைக்கு எதிராக பாரிய அளவிலான எதிர்ப்புப் பிரச்சாரத்தை ஏற்பாடு செய்யவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள வாரம் கறுப்பு வாரமாக பெயரிடப்பட்டுள்ளதாக குறித்த சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.
தமது பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உரிய தீர்வை வழங்காவிடின் தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுமக்களை இணைத்து பாரியளவிலான போராட்டத்தை நடத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.