follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுகைது செய்யப்பட்ட நபரின் மரணம் தொடர்பில் விசாரணை

கைது செய்யப்பட்ட நபரின் மரணம் தொடர்பில் விசாரணை

Published on

போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் மரணம் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்தமை தொடர்பில் மருதானை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த 10ஆம் திகதி மாலை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் சுமார் 15 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளின் போது அதிகாரிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு வன்முறையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது

குறித்த சம்பவத்தினால், சந்தேகநபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

நாரஹென்பிட்ட தொழிற்பயிற்சி அதிகாரசபையின் உதவி முகாமையாளரான 41 வயதுடைய ஹிக்கடுவ பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த சந்தேக நபரின் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மருதானை பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...