follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுகைது செய்யப்பட்ட நபரின் மரணம் தொடர்பில் விசாரணை

கைது செய்யப்பட்ட நபரின் மரணம் தொடர்பில் விசாரணை

Published on

போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் மரணம் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்தமை தொடர்பில் மருதானை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த 10ஆம் திகதி மாலை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் சுமார் 15 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளின் போது அதிகாரிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு வன்முறையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது

குறித்த சம்பவத்தினால், சந்தேகநபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

நாரஹென்பிட்ட தொழிற்பயிற்சி அதிகாரசபையின் உதவி முகாமையாளரான 41 வயதுடைய ஹிக்கடுவ பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த சந்தேக நபரின் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மருதானை பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...