follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP3இந்திய மாநாட்டில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி

இந்திய மாநாட்டில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி

Published on

இந்தியாவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “வொய்ஸ் ஒப் க்ளோபல் சௌத் சம்மிட்” மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று சூம் தொழினுட்பத்தினூடாக கலந்துகொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் தலைமையில் இந்த மாநாடு இன்றும் நாளையும் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் பங்களாதேஷ் பிரதமர் ஷெயிக் ஹசீனா உள்ளிட்ட 20 க்கு மேற்பட்ட அரச தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

அங்கோலியா, கானா, நைஜீரியா, மொசாம்பிக், செனகல் உள்ளிட்ட ஆபிரிக்க நாடுகளின் தலைவர்களும் ஆசிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும், உஸ்பெஸ்கிஸ்தான் மொங்கோலியா, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் பப்புவா நியூ கினியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...