இன்றைய தினம் அரச மற்றும் அரச அனுசரணையுடன் இயங்கும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படமாட்டாதென கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்த் குமார் எமது செய்திப் பிரிவுக்கு இதனைத் தெரிவித்தார்.
மூன்றாம் தவணை விடுமுறை 3 கட்டங்களாக வழங்கப்பட்டுவருவதை கருத்திற்கொண்டு, இன்றைய தினம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்றைய தினம் வழமைபோல பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இடம்பெறுமென இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
தைப் பொங்கலை முன்னிட்டு இன்று (16) சிறப்பு வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.