follow the truth

follow the truth

July, 27, 2025
Homeஉள்நாடுஇந்திய வெளியுறவுச் செயலாளர் இலங்கை வந்தடைந்தார்

இந்திய வெளியுறவுச் செயலாளர் இலங்கை வந்தடைந்தார்

Published on

இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஹர்ஷ் வர்தன் 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று மாலை இலங்கை வந்தடைந்தார்.

அவர் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பாரென வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிவிவகாரத்துறை செயலாளர் ஜயநாத் கொழம்பகேவின் அழைப்பிற்கமைய அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் அவர், இருதரப்பு உறவுகள்குறித்து பேச்சுவார்த்தையை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதுதவிர ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரையும் அவர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

அத்துடன், இந்திய வெளிவிவகார செயலாளர் கண்டி, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களுக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளி குறித்து பொலிஸார் விளக்கம்

பத்தரமுல்லை – பெலவத்தை பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் பொலிஸார் அனுமதியின்றி நுழைந்ததாக சமூக ஊடகங்களில் எழுந்த குற்றச்சாட்டுகள்...

பாதுகாப்பு அமைச்சின் புதிய ஊடகப் பணிப்பாளர் கடமைகளைப் பொறுப்பேற்றார்

பாதுகாப்பு அமைச்சின் புதிய ஊடக பணிப்பாளராகவும் ஊடகப் பேச்சாளராகவும் நியமிக்கப்பட்ட பிரிகேடியர் எஸ். ஜோசப், கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். முன்னர் இந்தப்...

காடுகளுக்குள் துப்பாக்கிகளை எடுத்துச் செல்வது குறித்து விசேட விசாரணை

வனப்பகுதிகளுக்குள் துப்பாக்கிகளை எடுத்துச் செல்வது குறித்து விசேட விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக வனப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் யானைகள்...