follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுமுதலாவது சட்டமூலத்தை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்

முதலாவது சட்டமூலத்தை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்

Published on

2023ஆம் ஆண்டின் முதலாவது சட்டமூலத்தில் சபாநாயகர் இன்று(17) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். குத்தகைக்கு கொடுக்கப்பட்ட வளவுகளின் உடைமையை மீளப்பெறுதல் சட்டமூலத்தையே சபாநாயகர் இவ்வாறு சான்றுரைப்படுத்தினார்.

குத்தகை உடன்படிக்கையொன்றின் கீழ் குத்தகைக்குக் கொடுக்கப்பட்ட வளவுகளின் உடைமையை மீளப்பெறுதல் தொடர்பான நடவடிக்கை முறைக்காக ஏற்பாடு செய்வதற்கும், குத்தகை, வாடகைகள், சேவை விதிப்பனவுகள் மற்றும் ஒழித்துக் கட்டப்பட்ட சேதவீடுகளின் நிலுவைகளை அறவிடுவதற்கான ஒழுங்குபடுத்துவதற்கும், அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநோ்விளைவான கருமங்களுக்காக ஏற்பாடு செய்வதற்காக இந்தச் சட்டமூலத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட சட்டமூலம் கடந்த ஜனவரி 05ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

சபாநாயகர் இச்சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தியதைத் தொடர்ந்து இது 2023ஆம் ஆண்டு 01ஆம் இலக்க குத்தகைக்குக் கொடுக்கப்பட்ட வளவுகளின் உடைமையை மீளப்பெறுதல் சட்டமாக இன்று(17) முதல் நடைமுறைக்கு வருகிறது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...