follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉள்நாடுநாட்டை விட்டு வெளியேறிய செல்வம் நாட்டின் கடன் சுமைக்கு சமம்

நாட்டை விட்டு வெளியேறிய செல்வம் நாட்டின் கடன் சுமைக்கு சமம்

Published on

கடந்த இரண்டு தசாப்தங்களில் நாட்டின் 7% இறக்குமதி மற்றும் ஏற்றுமதிகள் மறைக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் நாட்டை விட்டு வெளியேறிய செல்வம் நாட்டின் மொத்த கடன் சுமைக்கு சமமாக இருப்பதாக பாட்டளி சம்பிக்க ரணவக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தேயிலை, இறப்பர், தென்னை போன்றவற்றுக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஏற்றுமதிப் பொருளாதாரத்தை அதற்கு அப்பால் கொண்டு வர வேண்டும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், ஏற்றுமதியை பன்முகப்படுத்துவதை துரிதப்படுத்தும் வகையில் தகவல் தொழிநுட்பத் துறையிலும் அதிக கவனம் செலுத்த வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

“சர்வதேச வர்த்தகத்தின் மதிப்பை முதன்முதலில் புரிந்துகொண்டவர் நமது பெரிய மன்னர் பராக்கிரமபாகு. அவர் பொதுவாக விவசாயத்திற்கு அப்பால் சென்று சர்வதேச வர்த்தகத்தின் மூலம் நாட்டை ஆசியாவிற்கும் உலகிற்கும் திறந்தார்.

1976 க்குப் பிறகு இப்போது வரை பொருட்களின் உற்பத்திக்கு ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை பின்பற்றி வருகிறோம். இது எந்தளவுக்கு வெற்றியடைந்துள்ளது? 1990க்குப் பிறகு இந்த நாட்டின் ஏற்றுமதித் துறையைப் பார்த்தால், எதுவும் மாறவில்லை. நாங்கள் இன்னும் ஆடைத் தொழில், தேயிலை, தேங்காய் மற்றும் இறப்பர் ஆகியவற்றிற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளோம்..” என பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்திருந்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

வெள்ளம் ஏற்படும் அபாயம்

எதிர்வரும் நாட்களில் பலத்த மழை பெய்தால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி,...

எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய பிரதான வீதியை இன்று (17) இரவு 8 மணி முதல்...

உயர் நீதிமன்றினால் கோட்டாவுக்கு நோட்டீஸ்

கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவிற்கு பொது மன்னிப்பு வழங்கியமை தொடர்பில்...