follow the truth

follow the truth

May, 19, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியா"நாட்டை மீளக் கட்டியெழுப்பவே பேரூந்துகளை தானமாக வழங்குகிறேன்"

“நாட்டை மீளக் கட்டியெழுப்பவே பேரூந்துகளை தானமாக வழங்குகிறேன்”

Published on

பாடசாலைகளுக்கு பஸ்களை நன்கொடையாக வழங்குவது தொடர்பில் இப்போது விவாதம் நடத்தவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தான் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பேருந்துகளை நன்கொடையாக வழங்குவதில்லை என எதிர்க்கட்சித்தலைவர் இதன்போது தெரிவித்திருந்தார்.

“நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப உதவுமாறு அரசாங்கமே கேட்டுக் கொண்டது. இதுவரை எழுபது அரசப் பாடசாலைகளுக்கு பேருந்துகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தில் யாரும் உதவி பெறுவதில்லை. பேருந்துகள் தானம் பற்றி தனியாக விவாதம் நடத்தலாம். பதில் சொல்கிறேன். தேர்தலின் போது பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டி ஓட்டு கேட்பது நல்லது. பாடசாலை மாணவர்களுக்கு பேருந்துகள் கொடுப்பது நல்லதல்ல..”

ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்க; பேருந்து வழங்குவதை நான் விமர்சிக்கவில்லை. பேருந்துகள் வழங்கிய பின்னர் ஜேவிபி அடுத்தவாரம் கூட்டத்தை நடத்தி விமர்சிக்கும் எனத் தெரிவித்திருந்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்றம் ஜூனில் கலைக்கப்படும்

நிச்சயம் பொதுத் தேர்தல் தான் வரும் ஜனாதிபதி தேர்தல் அல்ல எனவும் எதிர்வரும் 14 அல்லது 15ஆம் திகதிகளில்...

ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தன போட்டியிடுவதா இல்லையா என்ற கேள்வி மக்கள் மத்தியில் அப்படியே இருக்கட்டுமே என ஜனாதிபதி...

“கன்னத்தில் அறைந்தது உண்மைதான்” – பிரசன்ன ரணவீர

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளின் பயணப் பொதிகளை ஏற்றிச் செல்லும் போர்ட்டர் ஒருவரை சிறு மற்றும் நடுத்தர தொழில்...