follow the truth

follow the truth

August, 6, 2025
Homeஉள்நாடுஅட்டைகளுக்கு பற்றாக்குறை - ஆட்பதிவுத் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்

அட்டைகளுக்கு பற்றாக்குறை – ஆட்பதிவுத் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்

Published on

தேசிய அடையாள அட்டைகளை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்படும் அட்டைகளின் பற்றாக்குறை காரணமாக 2005 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்தவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை வழங்குவது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, தேசிய அடையாள அட்டைகளை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்படும் அட்டைகளுக்கு தற்போது நிலவும் தட்டுப்பாடு நீக்கப்படும் வரை தேசிய அடையாள அட்டை விநியோகம் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி தெரிவித்துள்ளார்.

மேலும் பொதுப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு தேசிய அடையாள அட்டைக்குப் பதிலாக ஆட்பதிவுத் திணைக்களத்தினால் சான்றளிக்கப்பட்ட ஆவணத்தை மாத்திரமே ஆட்பதிவுத் திணைக்களம் வழங்கும் எனவும் இவ்வாறு வழங்கப்பட்ட ஆவணம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வரை செல்லுபடியாகும் என ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...