தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பிக்க கால அவகாசம்

267

அத்தாட்சிப்படுத்தப்பட்ட தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை, மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு சமர்ப்பிக்க நாளை (20) முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை, கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வார இறுதி நாட்கள் வருவதால், தபால் மூலம், விண்ணப்பங்களைப் பெறுவதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் 23ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here