மாவனல்லை பிரதேச சபையின் தலைவர் சமந்த ஸ்டீபன் மற்றும் அவரது சாரதி ஹசித திலகரத்ன ஆகியோர் எதிர்வரும் ஜனவரி 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் 13ஆம் திகதி கட்டிடத் திட்டமொன்றை அங்கீகரிப்பதற்காக இரண்டு மில்லியன் ரூபாவை இலஞ்சமாகப் பெற்ற தலைவரையும் அவரது சாரதியையும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கைது செய்தது.