follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுஇலங்கை வந்தார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்

இலங்கை வந்தார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்

Published on

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்தார்.

இவரது இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் தமிழ்த்தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாட உள்ளார்.

அத்துடன் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவையும் சந்தித்து கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் முக்கிய செய்தியுடன் கொழும்பு வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கான திகதி குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அறிவிக்கலாம் என இராஜதந்திர மட்ட தகவல்கள் குறிப்பிடுகின்றன.

ஏனெனில் ஜனாதிபதி ரணில் பதவியேற்றதன் பின்னர் பிரதமர் மோடியுடனான சந்திப்புக்கு முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் இதுவரையில் அதற்கான வாய்ப்பு கிடைக்க வில்லை.

எனவே இந்த விஜயத்தின் போது பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து இலங்கை கவனத்தில் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...