follow the truth

follow the truth

May, 21, 2024
Homeஉள்நாடுஇந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு

Published on

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் விடுக்கப்பட்ட அழைப்பை அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்துள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

இலங்கை மக்களுடன் இந்தியா கொண்டிருக்கும் ஆழமானதும் நிலைபேறானதுமான நட்புறவை வலியுறுத்தும் திட்டங்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுடன் இணைந்து அங்குரார்ப்பணம் செய்தமையையிட்டு பெருமகிழ்வடைகின்றேன். என்று வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதன்படி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விரைவில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுவதுடன், இதன்போது குறிப்பாக இலங்கையின் வலுவான மீட்சியை முன்னிறுத்தி மேற்கொள்ளத்தக்க நடவடிக்கைகள் குறித்து இருநாட்டுத்தலைவர்களும் கலந்துரையாடல்களை முன்னெடுப்பர்.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கான அறிவிப்பு

வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (22) மீண்டும் திறக்கப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக...

எக்ஸ்பிரஸ் பேர்ள் விபத்து நடந்து 3 வருடங்கள்

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்துக்குள்ளாகி இன்றுடன் (21) மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்றன. இதனால் வாழ்வாதாரத்தை பெற முடியாத நிலையில் உள்ள...

விஜயதாசவின் மனு மீண்டும் விசாரணைக்கு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜயதாச ராஜபக்ஷவையும் பதில் செயலாளராக கீர்த்தி உடவத்தவையும் நியமித்தது சட்டவிரோதமானது என நாடாளுமன்ற...