கொழும்பின் பல பகுதிகளில் நீர்வெட்டு

333

கொழும்பு – தெஹிவளை, கல்கிசை, கோட்டை, கடுவெல, இரத்மலானை மற்றும் கட்டுபெத்த ஆகிய பகுதிகளில் நாளை(21) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

காலை 11 மணி முதல் இரவு 09 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படுமென நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்தது.

கொழும்பு 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 ஆகிய பகுதிகளில் நாளை (21) மு.ப. 11.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 9 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்த காலப்பகுதியில் மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ, கொட்டிகாவத்த, முல்லேரியா பகுதிகளிலும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

மின்சார சபையின் அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here