follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுநாடாளுமன்ற உறுப்பினர் பதவி காலி : தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குத் அறிவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் பதவி காலி : தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குத் அறிவிப்பு

Published on

முஜிபுர் ரஹ்மான் இராஜினாமா செய்ததால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாக உள்ளதாக நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளார்.

இதன்படி, கொழும்புத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஜிபுர் ரஹ்மான், தனது உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக, நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

முஜிபுர் ரஹ்மானின் கடிதத்தின்படி, மேற்படி இராஜினாமா ஜனவரி 20, 2023 முதல் நடைமுறைக்கு வரும் என்று பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, ஒன்பதாவது பாராளுமன்றத்தில் முஜிபுர் ரஹ்மானின் ஆசனம் 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் பிரிவு 64(1)இன் பிரகாரம் வெற்றிடமாக இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு செயலாளர் நாயகம் தெரிவிக்கின்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...