உயர் உற்பத்தித்திறன் சமூக அபிவிருத்தித் திட்டங்களின் பெறுமதியை அதிகரிப்பது தொடர்பான காலவரையறை ஒப்பந்தத்திற்கான ஆவணங்களில் இலங்கையும் இந்தியாவும் இன்று (20) கைச்சாத்திட்டுள்ளன.
2005 ஆம் ஆண்டு முதன் முதலாக கைச்சாத்திடப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் தனியார் ஒப்பந்த பெறுமதி வரம்பு 300 மில்லியனில் இருந்து 600 மில்லியன் ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, உயர் வினைத்திறன்மிக்க சமூக அபிவிருத்தி நிதியத்தின் பெறுமதி 05 முதல் 10 பில்லியன் ரூபா வரை இரட்டிப்பாகும்.