follow the truth

follow the truth

May, 1, 2025
HomeTOP2களனிதிஸ்ஸ மீண்டும் சேவையில் இணைந்தது

களனிதிஸ்ஸ மீண்டும் சேவையில் இணைந்தது

Published on

களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் உற்பத்தி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இன்று காலை 08.00 மணியளவில் மீண்டும் ஆலையின் உற்பத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதாக ஆலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

போதியளவு நாப்தா இல்லாததால் களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தின் உற்பத்தி நடவடிக்கைகள் நேற்று நள்ளிரவு முதல் நிறுத்தப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் தற்போதுள்ள நாப்தாவைக் கொண்டு மீள் உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், அது இன்னும் ஒன்றரை நாட்களுக்கு மட்டுமே போதுமானது எனவும் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு மின்சார சபையினால் பணம் செலுத்தப்படாமையால் நாப்தா வழங்க மறுத்தமையே இந்த நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் திடீர் மரணம் குறித்து கல்வி அமைச்சின் நடவடிக்கை

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் திடீரென உயிரிழந்ததற்கான சூழ்நிலைகள் குறித்து முழுமையான விசாரணையை...

கல்ஹின்ன பள்ளிவாசல் தொடர்பான மேன் முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பினை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை

கல்ஹின்ன ஜும்ஆப் பள்ளிவாசல் தொடர்பாக மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வழங்கப்பட்ட...

அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டை பயன்படுத்தும் சேவை தாமதம்

அதிவேக நெடுஞ்சாலைகளில், வங்கி அட்டைகளைப் பயன்படுத்திக் கொடுப்பனவை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேலும் தாமதமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல்...