follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுநீர் விளையாட்டு தொடர்பான பிரச்சனைகளை ஆராய குழு.நியமனம்

நீர் விளையாட்டு தொடர்பான பிரச்சனைகளை ஆராய குழு.நியமனம்

Published on

கித்துல்கல பிரதேசத்தை மையமாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் உலகப் பிரசித்தி பெற்ற வைட் வோடர் ராப்டிங் (white water Rafting) நீர் விளையாட்டில் பிரோட்லண்ட் நீர்மின் திட்டத்தினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து, சாத்தியமான தீர்வுகளைப் பரிந்துரை செய்வதற்காக குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.

பிரோட்லண்ட் நீர்மின் திட்டத்தினால் கித்துல்கல வைட் வோடர் ராப்டிங் விளையாட்டு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் தொடர்பில் ஆராய்வதற்காக நேற்று (23) ஜனாதிபதி அலுவலகத்தில் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதியின் செயலாளர் மேற்படி பணிப்புரையை வழங்கினார்.

சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் துறைசார் நிறுவனங்களின் அதிகாரிகளை உள்ளடக்கிய வகையில் நியமிக்கப்படவுள்ள இக்குழுவானது, குறிப்பிட்ட விடயம் தொடர்பில் கள விசாரணை நடத்தி இரண்டு வாரங்களுக்குள் அதற்கான அறிக்கையை சமர்பிக்க வேண்டுமெனவும் ஜனாதிபதியின் செயலாளர் இக்கூட்டத்தில் ஆலோசனை வழங்கினார்.

பிரோட்லண்ட் நீர்மின் திட்டம் காரணமாக கித்துல்கல வைட் வோடர் ராப்டிங் விளையாட்டு மற்றும் அதனுடன் தொடர்புபட்ட விடயங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதனுடன் தொடர்புடைய சேவைகளை வழங்கும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதன்காரணமாக தமது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடும் மேற்படி மக்கள், நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தரக்கூடிய இந்த விளையாட்டை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...

அரசு உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ளது

உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக்...