follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடு"ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்த வேண்டும்"

“ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்த வேண்டும்”

Published on

மக்கள் கருத்து திரிபுபடுத்தப்பட்டுள்ள நிலையில் மக்களின் கருத்துகளை ஆராய வேண்டும் என்றும், ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்த வேண்டும் என்றும் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்திருந்தார்.

“மார்ச் 9ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, நாடு தேர்தலுக்குள் நுழைந்துவிட்டது. தேர்தல் ஒரு ஜனநாயக செயல்முறை. இது புரிந்துகொள்ளத்தக்கது.

தற்போது மக்களின் கருத்து திரிபுபடுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மக்களின் கருத்தை ஆராய வேண்டும். இது உள்ளூராட்சித் தேர்தல் என்றாலும், வாக்குப்பதிவு காரணமாக இது மிக முக்கியமான தேர்தல். ஆனால் தேர்தலை காணமுடியாத நிலையில் நிறைவேற்று அதிகார சபையினர் செயற்படுகின்றனர். நாட்டில் மீண்டும் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்தத் தேர்தலை மீண்டும் ஒத்திவைக்க முற்பட்டால், அது இந்தத் தலைவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளையே கலைக்கச் செய்யும். கடந்த காலங்களில் தேர்தலை ஒத்திவைத்த கட்சிகளும் கலைந்தன. பொதுஜன பெரமுனவின் சில தலைவர்கள் இந்த நிலைமையை முன்வைத்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச நிர்வாகச் செயலாளருக்கும் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. உண்மையில் நடந்திருப்பது அமைச்சரவையில் சாராம்சம் போடாமல், சாராம்சமிட்டு போட்டு அனுப்பியது இது விளையாட்டல்ல. அமைச்சரவை செயலாளரிடம் போலி சாராம்சம் எழுதச் சொன்னது யார் என்று தெரியவில்லை. அமைச்சரவையில் விவாதிக்கப்படாத விடயம் அமைச்சரவை தீர்மானமாக எழுதப்பட்டால் அது பாரிய தவறு. அரசுக்கு எதிரான குற்றம்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...