கடன்வழங்கிய நாடுகளின் இறுதி உத்தரவாதம் கிடைத்ததும் நிதி உதவியை உறுதிசெய்ய முடியும்

302

சர்வதேச நாணயநிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கிருஸ்ணமூர்த்தி சுப்பிரமணியன் பிரதமர் தினேஸ் குணவர்தனவை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

பொருளாதார மறுசீரமைப்புக்காக சீர்த்திருத்தங்களை விரைவுப்படுத்துவதற்கும், வரி அதிகரிப்பை அமுல்படுத்துவதற்கும் இலங்கை தலைமைத்துவம் காட்டும் அரசியல் உறுதிப்பாடு மதிக்கதக்கது என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவிக்கான அனைத்து தேவைகளும் பூர்த்தியாகிவிட்டன இலங்கைக்கு கடன்வழங்கிய முக்கிய நாடுகளின் இறுதி உத்தரவாதம் கிடைத்ததும் நிதி உதவியை உறுதி செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here