follow the truth

follow the truth

August, 25, 2025
HomeTOP2இலங்கையில் பாரிய முதலீடுகளை செய்த அதானி மீது நிதி மோசடி குற்றச்சாட்டு

இலங்கையில் பாரிய முதலீடுகளை செய்த அதானி மீது நிதி மோசடி குற்றச்சாட்டு

Published on

இலங்கையில் பாரிய முதலீடுகளை செய்த அதானி மீது பாரிய நிதி மோசடி குற்றச்சாட்டு

இந்தியாவின் கோடீஸ்வர தொழிலதிபர் கௌதம் அதானி இலங்கையில் பாரிய முதலீடுகளை மேற்கொண்டுள்ளதாக அமெரிக்க முதலீட்டு நிறுவனம் ஒன்று குற்றம் சுமத்தியுள்ளது.

அதானி பங்குச் சந்தையையும் கணக்குகளையும் ஏமாற்றிவிட்டதாகச் சொல்கிறார்கள். இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை உலகம் முழுவதும் பெரும் விவாதத்தை எழுப்பியுள்ளது.

அதன் தாக்கம் மிக அதிகமாக இருப்பதால் ஒரே நாளில் அதானியின் பங்குச் சந்தை மதிப்பு 11 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சரிந்துள்ளது. அதானி நிறுவனத்தின் பங்குகள் ஏலம் இன்று நடைபெற உள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், அதானி நிறுவனம் தன் மீதான இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலும் நிராகரிப்பதாகக் கூறுகிறது. சம்பந்தப்பட்ட அறிக்கை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கெளதம் அதானி கூறியுள்ளார்.

இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனம் அதானி. கௌதம் அதானி ஆசியாவின் கோடீஸ்வரரும் கூட. ஃபோர்ப்ஸ் தரவரிசையின்படி, அவர் உலகின் பணக்காரர்களின் பட்டியலில் 03 வது இடத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...