follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

Published on

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை முன்னெடுத்துச் செல்வதை தடுக்கும் வகையில் பிரதிவாதிகள் முன்வைத்த ஆரம்ப ஆட்சேபனையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

இதுதொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு தடையில்லை என தெரிவித்த நீதிபதி, மே 10ஆம் திகதி விசாரணை நடைபெறும் என்றும், சாட்சிகளை அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுத்துள்ளார்.

வர்த்தக அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் சதொச ஊழியர்களை அவர்களது கடமைகளிலிருந்து விலக்கி அரசியல் செயற்பாடுகளுக்காக பயன்படுத்தியதாக தெரிவித்து முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வழக்குத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...