மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் – ஜனக மீண்டும் கோரிக்கை

467

தற்போது நடைபெறும் உயர்தரப் பரீட்சை காலப்பகுதியில் மின் துண்டிப்பதைத் தவிர்க்குமாறு இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மீண்டும் இலங்கை மின்சார சபைக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளது.

மின்தடையை அமுல்படுத்துவதற்கு அனுமதிகோரி, இலங்கை மின்சார சபை பொது முகாமையாளரால் நேற்று பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு கடிமொன்று அனுப்பப்பட்டதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தமது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பாகும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனவரி 26 முதல் பெப்ரவரி 17 வரை மின்சாரத்தை துண்டிக்க இலங்கை மின்சார சபைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்காது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அந்தக் காலப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அதற்கு சட்டரீதியாக இலங்கை மின்சார சபையே பொறுப்பேற்க வேண்டும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here