follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுபேர வாவியை இலவசமாக சுத்தப்படுத்த ஜப்பானிய நிறுவனம் இணக்கம்

பேர வாவியை இலவசமாக சுத்தப்படுத்த ஜப்பானிய நிறுவனம் இணக்கம்

Published on

கொழும்பில் உள்ள பேர வாவியை சுத்தம் செய்து அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தை இலவசமாக முன்னெடுப்பதற்கு ஜப்பானிய நிறுவனம் ஒன்று அரசாங்கத்திடம் இணக்கம் தெரிவித்துள்ளது.

காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன மற்றும் நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கு இடையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் குறித்த நிறுவனம் இந்த உடன்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.

6 மாதங்களுக்குள் இந்த வேலைத்திட்டத்தை நிறைவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு , இதற்காக 3 மில்லியன் டொலர் செலவாகும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிதி சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து மானியமாக இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது.

பெப்ரவரி முதல் வாரத்தில் இது தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு , அதன் பிறகு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள் தாமதம்

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள்  இன்று பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே  திணைக்களம்  தெரிவித்துள்ளது.  மொரட்டுவ மற்றும் பாணந்துறை இடையேயான தண்டவாளத்தில் ஏற்பட்ட...

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...