follow the truth

follow the truth

May, 10, 2025
Homeஉள்நாடுஅரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள்

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள்

Published on

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள மருந்துப்பொருட்கள் உபகரணங்கள் தட்டுப்பாடு காரணமாக இலங்கை மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் தீர்வை வழங்கவேண்டுமென்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சுகாதார அமைச்சு உட்பட அதிகாரிகளுக்கு அவசியமான அழுத்தங்களை உலக சுகாதார ஸ்தாபனம் கொடுக்கவேண்டும் எனவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மருந்துகளை கொள்வனவு செய்வதில் பல முறைகேடுகள், ஊழல்கள் இடம்பெறுகின்றன என்றுஅரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

அதிகாரிகளிடம் இது குறித்து வேண்டுகோள் விடுத்துள்ள போதிலும் சாதகமான பதில் கிடைக்கவில்லையென குறிப்பிட்டுள்ளார். நோயாளிகள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு உரிய அதிகாரிகளுக்கு தெரிவிப்பதன் மூலம் தீர்வை காணமுடியாது என்பதை அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் உணர்ந்துள்ளது இதன் காரணமாகவே உலக சுகாதார ஸ்தாபனத்தை நாட தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பு – வொக்ஷோல் வீதியில் 02 கட்டிடங்களில் தீ பரவல்

கொழும்பு 02 வொக்ஷோல் வீதியில் உள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. தீயை கட்டுப்படுத்த ஐந்து தீயணைப்பு வாகனங்கள்...

அரசியலமைப்பு சபையின் செயலாளர் பதவியிலிருந்து இராஜினாமா

அரசியலமைப்பு சபையின் செயலாளராகப் பணியாற்றிய முன்னாள் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக,...

அரச ஊழியர்களின் இடர் கடன் தொடர்பான சுற்றறிக்கை

2025 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரசாங்க ஊழியர்களின் ஆகக் குறைந்தது அடிப்படைச் சம்பளத்தை அதிகரிப்பதை கவனத்திற் கொண்டு...