follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடு"குற்றச்சாட்டுகளை நிரூபிக்காமல் பதவியை இழக்க மாட்டேன்"

“குற்றச்சாட்டுகளை நிரூபிக்காமல் பதவியை இழக்க மாட்டேன்”

Published on

கடமை, ஒழுக்காற்று அல்லது நிதிக் குற்றங்களை நிரூபிக்காமல் தமக்கு எதிரான பாராளுமன்ற உறுப்பினர்களின் மனுவில் கையொப்பமிட்ட மாத்திரம் என்னை பதவியில் இருந்து நீக்க முடியாது என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு தெரிவித்தார்.

ஆணைக்குழுவின் இலக்குகளுக்காக தாம் தொடர்ச்சியாக வக்காலத்து வாங்குவது ஆட்சியாளர்களுக்கு தலைவலியாக மாறியுள்ளதாகவும் தெரிவித்த அவர், மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு எதிராக முன்னெடுக்கும் மக்கள் சார்பான போராட்டத்தை பொறுப்பு அமைச்சரோ அல்லது ஆளும் கட்சி உறுப்பினர்களோ தடுத்து நிறுத்த முடியாது எனவும் தெரிவித்தார்.

தனது பதவிக் காலம் இன்னும் இரண்டு வருடங்கள் இருப்பதால், அந்தக் காலப்பகுதியில் தனது கடமைகளை சரியாகவும் மனசாட்சியுடனும் நிறைவேற்றுவேன் என நம்புவதாக ஜனக ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...

அரசு உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ளது

உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக்...