follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடு"ஐக்கிய தேசியக் கட்சி எப்போதும், இனவாதம் பேசியதில்லை"

“ஐக்கிய தேசியக் கட்சி எப்போதும், இனவாதம் பேசியதில்லை”

Published on

இலங்கையின் திவால் ஸ்டிக்கர் விரைவில் நீங்கும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சில பிரச்சினைகள் இன்னும் எஞ்சியுள்ளதாகவும் அவை அனைத்தும் விரைவில் தீர்க்கப்படும் எனவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி எப்பொழுதும் நாட்டினதும், மக்களினதும் நலனுக்காக உழைத்ததாகவும், ஐக்கிய தேசியக் கட்சி நாட்டை ஆட்சி செய்த போதெல்லாம், நாடு முன்னோக்கி நகர்ந்ததாகவும், ஏனைய அரசியல் குழுக்கள் இனவாதத்தையும், மதவாதத்தையும் பரப்பி ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கங்களை தோற்கடித்த போதிலும், ஐக்கிய தேசியக் கட்சி எப்போதும் மக்களுக்காக நின்றதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.

கரந்தெனிய மற்றும் பலபிட்டிய தொகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாக சபைக் கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மனுஷ நாணயக்கார மேற்கண்டவாறு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...