அதிவேக நெடுஞ்சாலை பஸ்களில் முற்கொடுப்பனவு அட்டைகள்

282

காலி – மகும்புர இடையே அதிவேக நெடுஞ்சாலை பஸ்களில் பயணிக்க நாளை (2) முதல் முற்கொடுப்பனவு அட்டைகள் வழங்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் கலாநிதி திலான் மிராண்டா தெரிவித்தார்.

முற்கொடுப்பனவு அட்டைகளை மக்கள் வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி ஆகியவற்றில் கொள்வனவு செய்ய முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த முற்கொடுப்பனவு அட்டை வழங்குவது தொடர்பாக வங்கிகளுடன் உடன்பாடுகள் எட்டப்பட்டதாகவும் முதற்கட்டமாக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் பஸ்களில் இந்த அட்டை அறிமுகப்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here