follow the truth

follow the truth

March, 27, 2025
HomeTOP2பொஹட்டுவ சட்ட ஆலோசனையை நாடுகிறது

பொஹட்டுவ சட்ட ஆலோசனையை நாடுகிறது

Published on

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகிய பாராளுமன்ற உறுப்பினர்களை நீக்குவதற்கு தேவையான சட்ட ஆலோசனைகள் பெற்று வருவதாக கட்சியின் செயலாளர் நாயகம், நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் கூட்டணி கட்சிகளுடன் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே செயலாளர் நாயகம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கேள்வி – நீங்கள் விட்டுச் சென்றவர்களுக்குக் கடிதம் அனுப்பியதாக சொல்லப்படுகிறதே?

“அவர்கள் எல்லோரையும் நீக்கி விடுவோம்”

கேள்வி – அதாவது ஜி.எல்.பீரிஸ் மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோரையுமா?

“அனைவருக்கும் எதிராக தேவையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேவையான உண்மைகளை சேகரித்து தேவையான சட்ட ஆலோசனைகளை எடுத்து வருகிறோம்.”

கேள்வி – அவர்கள் வெளியேற்றப்படுவார்களா? என்ன செய்ய போகிறீர்கள்?

“அந்த நேரத்தில் நாம் சரியானதை செய்து காட்டுவோம்.”

கேள்வி – அவர்களின் பதவிகளுக்கு தற்போது புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்களா? கட்சிக்கு தலைவர் ஒருவர் இல்லையே.

“அவர் இல்லை என்று கட்சிக்கு எந்தக் குறையும் இல்லை. வெற்றி பெறுவதற்காக நாங்கள் பிரசாரம் செய்கிறோம். அந்த பிரசாரத்தை தற்போது தயார் செய்துள்ளோம். வாக்கு பெட்டிகளை எண்ணும் போது, ​​எப்படி வெற்றி பெற்றோம் என்பதை பார்க்கலாம்.”

கேள்வி – பசில் ஒரு மௌன நடைமுறையை பின்பற்றுகிறார்…

“அவர் எப்போதும் அமைதியாக இருக்கிறார், ஆனால் அவர் எப்போதும் சரியான முடிவுகளை வழங்கியுள்ளார்.”

கேள்வி – ஹெலிகொப்டர் மெதமுலன அல்லது நெலும் மாவத்தையில் இறக்கப்படும் என எதிர்க்கட்சிகள் கூறினால்…?

“தரையிறக்க மாட்டார்கள். எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும். அதுவும் நெலும் மாவத்தை அல்லது மெதமுலனவில்…”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வரி செலுத்துவதற்கான ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு இயந்திரம் உருவாக்கப்படும்

வரி செலுத்துவோர் மத்தியில் வரி செலுத்துவதற்கான ஆர்வத்தை ஏற்படுத்தும் ஒரு பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்று நிதி பிரதி...

கைதான சாமர சம்பத் தசநாயக்க விளக்கமறியலில்

கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில்...

நாளை ஆர்ப்பாட்டம் பேரணி நடத்த தடை

தொடர்ச்சியான போராட்டம் காரணமாக, கொழும்பு நகர மண்டபத்தைச் சுற்றி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுகாதார அறிவியல் பட்டதாரிகள் சங்கம்...