களுத்துறையில் சில பகுதிகளுக்கு நாளை(07) 18 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அளுத்கமை, மதுகம மற்றும் அகலவத்தை ஒன்றிணைந்த நீர் வழங்கல் திட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாளை (07) காலை 8 மணி முதல் நாளை மறுதினம் (08) அதிகாலை 2 மணிவரை இவ்வாறு நீர் விநியோகம் தடை அமுலப்டுத்தப்படவுள்ளது.
குறித்த காலப்பகுதியில் பேருவளை, அளுத்கம, தர்காநகர், பெந்தொட்டை, களுவாமோதர, பிலமினாவத்த, பயாகல மற்றும் மக்கொன ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.