துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், பலர் இடிபாடுகளுக்கு நடுவே சிக்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் 17.9 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.
துருக்கியில் 10 நகரங்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளதாக துருக்கியின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி முழுவதும் உள்ள 10 நகரங்கள் மற்றும் மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் ஒரு வாரத்திற்கு மூடப்படும் என்று அந்நாட்டின் துணை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
துருக்கி, சிரியா இரு நாடுகளில் மொத்தமாக நிலநடுக்கத்தால் இதுவரை 500க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது துருக்கியின் வரலாற்றில் மிகப்பெரிய நிலநடுக்கமாக இருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றன.
இந்த நடுக்கம் லெபனான், சைப்ரஸ் ஆகிய பகுதிகளிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.