follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடு'நிதியமைச்சு தம்மிடம் பணம் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கூறவில்லை'

‘நிதியமைச்சு தம்மிடம் பணம் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கூறவில்லை’

Published on

ஊடகங்கள் கூறுவது போல் தேர்தலை நடத்துவதற்கு நிதியமைச்சு தம்மிடம் பணம் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கூறவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு தெரிவித்தார்.

தேவையற்ற வேலைகளுக்கு செலவு செய்வதற்கு போதிய பணம் இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்து தொடர்பில் நாம் வினவியதற்கு பதிலளித்த ஆணைக்குழுவின் தலைவர், இது நாட்டில் உள்ள அனைவருக்கும் பொதுவான பிரச்சினையாக மாறிவிட்டதாக தெரிவித்திருந்தார்.

தேர்தலை தடுக்கும் பிரேரணை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டால் அது தொடர்பான இறுதி தீர்மானம் நீதிமன்றத்தினால் எடுக்கப்படும் எனவும் நிதி அமைச்சின் செயலாளர் பெப்ரவரி 10 ஆம் திகதி நிதி நிலைமை தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவித்த பின்னர் நீதிமன்றம் எடுக்கும் தீர்ப்பின்படி அனைத்து தரப்பினரும் செயல்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...