follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுதுருக்கியிலுள்ள இலங்கையர்கள் தொடர்பில் அறிய தொலைபேசி இலக்கங்கள்

துருக்கியிலுள்ள இலங்கையர்கள் தொடர்பில் அறிய தொலைபேசி இலக்கங்கள்

Published on

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து, அந்நாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் தொடர்பில் தகவல்களை தெரிந்து கொள்ள அல்லது அவர்கள் தொடர்பான தகவல்களை தெரிவிக்க துருக்கியிலுள்ள இலங்கைத் தூதரகம் தொடர்பு இலக்கங்களை அறிவித்துள்ளது.

அதற்கமைய, துருக்கிய தூதரகத்தை பின்வரும் அவசர தொலைபேசி இலக்கங்கள் மூலம் தொடர்பு கொள்ளலாமென, அங்குள்ள தூதுவர் ஹசந்தி உருகொடவத்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

+903124271032 மற்றும் +905344569498 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக அழைத்து தெரிந்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கியில் 270 இலங்கையர்கள் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், அனர்த்தம் இடம்பெற்ற அப்பகுதியில் உள்ள ஏனைய 13 பேர் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தூதரகத்தின் ஊடாக பதிவு செய்யப்பட்டவர்கள் தொடர்பில் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், அனர்த்த பிரதேசத்தில் இருந்த பெண் ஒருவர் தொடர்பில் இதுவரையில் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை எனவும், அவரது கையடக்கத் தொலைபேசி ஒரு இடத்தில் மீட்கப்பட்டதாகவும் தெரிவித்த துருக்கிக்கான இலங்கை தூதுவர், அவர் பாதுகாப்பாக ஏதேனும் இடத்தில் இருப்பார் என எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...