பொலிஸார் போல் வேடமிட்ட நால்வர் கைது

306

நிட்டம்புவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் பொலிஸார் போல் மாறுவேடமிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது இரண்டு கைவிலங்குகள் மற்றும் 3 போலி இலக்க தகடுகளும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 25, 26 ,27 மற்றும் 42 வயதுடைய நிட்டம்புவ, முல்லேரிய, கிந்தோட்டை மற்றும் எல்லக்கல பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் ஏதேனும் குற்றச்செயல்களுக்காக பயணித்தார்களா? என்பது தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here