முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலங்கையில் உள்ள துருக்கி தூதரகத்துக்கு இன்று (9) சென்று நில நடுக்கத்தால் நேர்ந்த உயிரிழப்புகளுக்காக அனுதாபம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அங்கு உயிரிழந்தவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கையில் உள்ள துருக்கி தூதரகத்துக்கு சென்று, அங்குள்ள அனுதாபப் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.
அத்துடன், இலங்கை மக்களின் பிரார்த்தனைகள் துருக்கிய அரசாங்கத்துடனும் மக்களுடனும் உள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.